செவ்வாய், 5 மே, 2015

தெலுங்கானா - பச்சைப் படுகொலைகள்



இங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா?
**************************************
கடந்த வாரம் தெலுங்கானா மாநிலத்தில்  இருவேறு போலிமோதல் படுகொலைகள் நடந்துள்ளது. முதலில் கடந்த 07.03.2015 அன்று நலகொண்டா மாவட்டத்தில் சூர்யபேட் பேருந்து நிலையத்தில் ரோந்து சென்ற காவலர்கள் மீது இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை சேர்ந்த முகமது இசாசுதின் மற்றும் அஸ்லாம் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டதாகவும், காவல்துறையினர் திருப்பிச்சுட்டதில் இருவரும் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டனர் என காவல்துறை தெரிவித்த்து . இந்த சம்பவத்தில் இரண்டு காவல்துறையினர் காயம் அடைந்து பின் அவர்கள் மருத்துவமனையில் இறந்துவிட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த 9.03.2015 அன்று வாராங்கால் சிறையில் இருந்த சிமி இயக்கத்தை சேர்ந்தவர்கள் விருகத்அகமத், சேயத் அஜ்மல், முகமது ஜாகீர், இசார்கான் மற்றும் முகமது அனிப் ஆகியோர் ஐதராபாத் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஆந்திராவில் ஜதராபாத் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக கடந்த 2010ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள்.

சிறையில் இருந்து போலீசார் வாகனத்தில் அழைத்து சென்றபோது  காவல்துறை 
வாகனம் நல்கொண்டா - வாராங்கால் எல்லையில் சென்றுக் கொண்டு இருந்தபோது விருகத் அகமது என்பவர்  தப்பி ஓடுவதற்கு முயற்சி செய்து காவல்துறையினரின் ஆயுதங்களை பறிக்க முயற்சி செய்ததாகவும் அப்போது காவல்துறையினத் நடத்திய எதிர் தாக்குதலில் அந்த 5 சிமி இயக்கத்தினரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொலை செய்யப்பட்ட 5 பேரும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்பு உடையவர்கள் என்றும்  பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உடன் நெருக்கமான தொடர்பு உடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 2014 ல்  இந்திய உச்சநீதிமன்றம் பியூசிஎல் எதில் மகாராஸ்டிர அரசு வழக்கில் என்கவுன்டர் வழக்குகளில் காவல்துறையினர் மீது தொடர்புடைய குற்ற வழக்கு( கொலை வழக்குபதிவு செய்யவேண்டும் என்றும் , தொர்புடைய காவல்துறையினருக்கு பதவி உயர்வு போன்ற சலுகைகள் வழங்கக்கூடாது என பல வழிகாட்டு நெரிகளை தனது  உத்தரவில் கூறியிருந்தாலும்  போலிமோதல் கொலைகள் தொடர்கின்றன. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை.
  


இந்த துப்பாக்கிச்சூட்டை கவனமாக  பார்த்தால் சிறையில் இருந்து 5பேரும் காவல்துறையினர் வாகனத்தில் துப்பாக்கி பாதுகாப்புடன் , கைவிலங்கு போட்டு கொண்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பலபுகைப்படங்கள் வெளிவந்துள்ளன, அவற்றில்  அவர்களின் கையில்போடப்பட்ட கை விலங்கு வாகன இருக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது

எனவே அவர்கள் தப்பித்துச் செல்வதற்கான வாய்ப்புக்கள் ஏதும் இல்லை. இது அப்பட்டமான படுகொலை. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் நிரபராதிகள் எனநிருபிக்கப்படும் முன் சட்டத்தை தூக்கி எரிந்துவிட்டு காவல்துறையினர் தங்களின் கைகளில் சட்டத்தையும் நீதிமன்றத்தை மதிக்காமல் இந்த படுகொலைகளை நிகழ்த்தியுள்ளனர். சட்டத்தின் ஆட்சி இந்திய துணைக்கண்டத்தில் நடக்கவில்லை என்பதை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.


………………………………………………



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக