வியாழன், 14 மே, 2015

ஏன் இந்தப் போராட்டம்


இலங்கையின் பூர்விக குடி மக்களான ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை  முதலில் ஆதரிப்பது போல நடித்து ஆயுத பயிற்சி அளித்தது இந்திய அரசு. பின்னர் சிங்கள அரசோடு சேர்ந்து கொண்டு அமைதிப்படை என்ற பெயரில்  நூற்றுக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்து பல வன்முறை செயல்களில் ஈடுபட்டது இந்திய ராணுவம்.

 தொடர்ந்து இந்திய அரசு ஆயுதங்களையும், படையியல் பயிற்சிகளையும் வழங்கி வந்தது. 2007 முதல் 2009 வரைநடந்த  தாக்குதலில் இந்திய அரசின் முப்படைகளும் சிங்கள அரசின் ராணுவத்துடன் இணைந்து பல ஆயிரம் தமிழர்களை ஈவு இரக்கமற்றவகையில் படுகொலை செய்தனர். சர்வதேச சமுதாயம் இதை தடுக்க முன்வந்தபோது இந்திய அரசு அந்த நாடுகளை தலையிடவிடாமல் தடுத்துவிட்டது.தமிழகம் வழியாக எந்த உதவிகளும் செய்யவிடாமல் இந்திய அரசு தடுத்துவிட்டது.

சிலர் இந்த இன அழிப்புக்கு ராசபக்சே, சோனியாபோன்ற தனிநபர்களை காரணம் காட்டி உண்மையை மறைக்க முயல்கின்றனர். சிலர் ஐ.நாவை காரணமாக காட்டுகின்றனர்.
உண்மையில் இந்த இனப்படுகொலைக்கு காரணமே இந்தியா தான்.
இந்தியா தான் முதன்மைக் குற்றவாளி.


எனவே தான், எங்கள் இனத்தை படுகொலை செய்து, தமிழீழ விடுதலைக்கு எதிராக செயல்படும் இந்திய அரசை கண்டித்து இந்த முற்றுகைப்போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தமிழ்த்தேச மக்கள் கட்சியின் இந்த முற்றுகைப்போராட்டத்திற்கு ஆதரவு அளித்து பங்கேற்க  அழைக்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக