திங்கள், 5 செப்டம்பர், 2016
புதன், 18 மே, 2016
முள்ளிவாய்காலுக்கு முற்றுப்புள்ளி
.
ஈழத்தில் நடந்த கொடூரமான இன அழிப்பை நினைவு கூறும் நாள் இன்று. ஈழத்திலும்
, இந்தியாவிலும், உலக நாடுகளிலும் இந்த கோரப் படுகொலைகளை நினைவு கூர்ந்து பல நிகழ்வுகள்
நடத்தப்படுகின்றன. ஈழ விடுதலைக்காக உயிர்நீத்த
போராளிகளுக்கும், தாக்குதலில் மரணமடைந்த மக்களுக்கும்
வீரவணக்கம் செலுத்துகிறார்கள்.
தங்களது போராளிகளையும் உறவுகளையும் இழந்த ஈழமக்கள் இந்த நிகழ்வை நடத்துவது இயல்பானது. தங்களது விடுதலைக்காக
இன்னுயிர் நீத்த மாவீரர்களை நினைவேந்துவதன் மூலம் தங்களது தாயக விடுதலைக்கான கனவு இன்னும்
தொடர்கிறது எனபதை உறுதிப்படுத்துகின்றனர்.
இதேபோல் உலக நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் இந்த நினைவு
நிகழ்வை நடத்துவது தங்களின் தாயக விடுதலைக்கு அடுத்தகட்ட நகர்வை சர்வதேச நாடுகளின்
உதவியுடன் செய்வதற்கான ஒரு செயல்பாடாக உள்ளது.
இந்தியாவில் உள்ளவர்கள் இந்த நிகழ்வை எப்படி
நடத்துகிறார்கள் என்று பார்த்தோமேயானால் ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் உள்ளது. இந்த
இனப்படுகொலையை செய்வதற்கு சிங்கள அரசுக்கு உறுதுணையாக இருந்தது இந்தியா அரசு. இந்திய
அரசு என்றால் சோனியா அரசு அல்லது மன்மோகன்சிங் அரசு என்றும், கருணாநிதி அரசு என்றும்
அதேபோல சிங்கள அரசு என்றால் அது ராசபக்சே அரசு என்றும் தவறாகப் பொருள் கொள்கிறார்கள்.
தமிழீழ மக்களைப் படுகொலை செய்த இந்திய ராணுவத்தையும், காவல் துறையையும் கொண்ட
இந்திய அரசு என்பது நிலையானது, ஆட்சி என்பது மட்டுமே மாறக்கூடியது.
இந்தியாவில் ஈழம் தொடர்பான கொள்கையில் இந்திய அரசின் நிலைப்பாடு என்பது ஒன்றுதான்.
காங்கிரசு ஆட்சியாக இருந்தாலும் பாரதீய சனதா ஆட்சியாக இருந்தாலும் இலங்கையை தங்களது
நட்புநாடாக கருதி சிங்கள அரசுக்கு ஆயுதங்களும்
பயிர்ச்சியும் தொடர்ச்சியாக அளித்து வருகின்றனர்.
தமிழக மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட ஆயுதங்களும், தமிழக மக்களின் வரியை
சம்பளமாக வாங்கக்கூடிய இந்திய ராணுவமும், காவல்துறையும் இந்த இனப்படுகொலையை சிங்கள
அரசுடன் சேர்ந்து செய்துள்ளது. இந்தியாவில் 9 கோடி தமிழர்கள் இந்தியனாக இருந்து இனஅழிப்பை
தடுக்காமல் விட்டுவிட்டோம்.
இப்போது முள்ளிவாய்கால் முடிவல்ல எனவும்,
நான்காம்
கட்ட போர் நடக்கும் எனவும் கடந்த 6 ஆண்டுகளாக பலர் வீன் ஜம்பம் அடித்துக்கொள்கிறார்கள்.
சிலர் மெழுகுவர்த்தி ஊர்வலம் என ஏதோ ஜெபக்கூட்டத்தை
கூட்டி ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் இருப்பை பதிவு செய்கிறார்கள்.
இந்த இனப்படுகொலைக்குப்
பின் எழுந்த தமிழின எழுச்சியை அடக்க , தமிழ்த்தேச
ஒருங்கிணைவைத்ே தடுக்க திராவிட கட்சிகளும், திராவிட இயக்கங்களும், சில பெரியார் தொண்டர்களும் பேதமின்றி கூட்டுசேர்ந்துள்ளனர். இவர்கள் திராவிடதுக்கு முட்டுக்கொடுத்து
நிற்கின்றனர். ஒருபக்கம் ஈழத் தமிழர்களுக்கு கண்ணீர்வடிக்கும் இவர்கள் மறுபக்கம் தமிழ்தேச
விடுதலைக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக இனப்படுகொலைக்கு எதிராக
வீர முழக்கமிட்ட பல இளைஞர்களை இவர்கள் தங்கள்
வழியில் இழுத்துச் சென்று ஒப்பாரி வைக்கும்
கூட்டமாக மாற்றிவிட்டனர்.
அவர்கள் ஏற்றும் மெழுகுவர்திகளும் , வருடாந்திர
ஒப்பாரிகளும் ஈழத்தமிழர்களுக்கு எந்தவித உரிமையையும் பெற்றுத்தரப்போவதில்லை. தனது சுதந்திரத்தை
நேசிக்காதவன், தமிழ்த்தேசிய இன விடுதலைக்கு எதிரானவன் ஈழவிடுதலைக்கு குரல் கொடுப்பது என்பது போலியானது
மட்டுமல்ல அவன் செயல் ஒரு ஏமாற்றுவித்தையும்
கூட.
முள்ளிவாய்கால் முடிவல்ல அது தொடரும் என்றால் அங்கு நடந்த இனப்படு கொலை தொடரும்
என கூறுகிறார்களா? அப்படியானால் அது இந்திய, சிங்களவன் குரலாகத்தானே இருக்கமுடியும்?.
மாறாக மவுனிக்கப்பட்ட
ஆயுதங்களின் செயல்பாட்டிற்கு முடிவல்ல என்றால், இன அழிப்புக்கு காரணமான இந்தியத்திற்கு எதிராக ஆயுதங்களை
கூடவேண்டாம் அவர்கள் தங்களின் கரங்களையாவது
நீட்டி இருக்கவேண்டாமா?.
தமிழக இளைஞர்களே சிந்தியுங்கள்!
முள்ளிவாய்கால் புலம்பலுக்கு முற்றுப்புள்ளி
வையுங்கள்.
இந்தியாவிற்கு எதிரான உங்கள் கரங்களை
உயர்த்துங்கள்.
தமிழ்த் தேசம் வெல்லட்டும் ! தமிழீழம்
மலரட்டும்!
வெள்ளி, 29 ஏப்ரல், 2016
தமிழர்களை மனநோயாளியாக மாற்றும் வதை
முகாம்கள்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் இருந்து
தப்பி தமிழகம் வந்த பலஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் உள்ள 110 க்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்களில் சுமார் எண்பதாயிரத்திற்கும்
மேற்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாம்களைத் தவிர சிறப்பு முகாம்களும் தமிழகத்தில்
உள்ளன. செங்கல்பட்டிலும் ,பூந்தமல்லியிலும் செயல்பட்ட சிறப்பு முகாம்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள்
முன் எடுக்கப்பட்டன.
இதன்காரணமாக இந்த இரு முகாம்களை மூடிய
தமிழக அரசு, கடந்த ஆண்டு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இருந்த பெண்கள் சிறையையும், செய்யாற்றில் செயல்பட்ட கிளைச் சிறைகளையும் முகாமாக
பெயர் மாற்றி அதில் தற்போது ஈழத் தமிழர்களை
அடைத்து வைத்துள்ளது.
திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்கள்
தொடர்ந்து பல அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களின் கோரிக்கை என்வென்றால் அவர்களின் மீதான வழக்குகளை விரைந்து நடத்தி முடிக்க
வேண்டும்,
இந்த இரண்டு சிறப்பு வதை முகாம்களையும்
மூடி, அதில் தற்போது அடைக்கப்பட்டுள்ளவர்களை வெளிமுகாமில் உள்ள
உறவினர்களோடு தங்க அனுமதிக்க வேண்டும் என்பதே.
இந்த சிறப்பு முகாம்கள் சிறைகளைவிட
கொடுமையானது. காரணம் இம்முகாம்களில் உள்ளவர்களைப் பார்க்க அவர்களின்
நண்பர்களோ, தொண்டுநிறுவனங்களோ அனுமதிக்கப்படுவதில்லை. சிறையில் உள்ளவர்களைக்கூட பார்க்க அனுமதிக்கும் இந்த அரசு
வழக்கறிஞர்களைக் கூட தமிழக அரசின் அனுமதி உத்தரவு இல்லை என்றால் இந்த இரண்டு
முகாம்களிலும்உள்ளவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை.
சிறப்பு முகாமில் உள்ளவர்கள் பொரும்பாலும்
ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பிச்
செல்ல முயன்றவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள். அவர்களில் பலர் பிணையில் வந்தவர்கள். சிலர் மீது போடப்பட்ட வழக்கு விடுதலை ஆகியுள்ளது. பலரது வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவர்களில் பலர் முறையாக காவல்நிலையத்திலும், முகாம்களிலும் பதிவு செய்தவர்கள். அவர்களை கடவுச்சீட்டு இல்லை என்றும் வெளிநாட்டினர்
சட்டத்தின் கீழும் கைது செய்துள்ளது தமிழக காவல்துறை. முறைப்படி காவல்நிலையத்திலும், முகாம்களிலும் பதிவு செய்தவர்களை இந்த
பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது எந்த வகையில் நியாயமானது.
சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்களை
மனிதாபிமானத்தோடு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு உரிய மருத்துவமனையில் உரிய
சிகிச்சையும்,
அவகளுக்கு உரிய வேலையும் அதற்கு உரிய
கூலியும் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு உள் மற்றும்வெளியரங்குளில் விளையாட்டு , மற்றும் யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்றும்
அவர்களுக்கு நூலகங்கள் அமைத்துத்தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல உரிமைகளை சென்னை உயர்நீதிமன்றம்
கடந்த 14.11.2003ல் பிரேமாவதி மற்றும் பலர் எதிர் தமிழக அரசு என்ற வழக்கில்
கூறியிருந்தும் இதுவரை அந்த உரிமைகளும்
சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இலங்கையில் சிங்கள அரசின் கீழ் உள்ள
முகாம்களைவிட மிகவும் கொடுமையான முகாமாக தமிழகத்தில் இந்த இரண்டு சிறப்பு முகாம்கள்
தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்குவது என்பது மிகவும் வேதனைக்குறியது.
இந்தியாவில் அண்டை நாடுகளில் இருந்து வந்துள்ள அகதிகள் சுதந்திரமாக இந்தியா முழுவதும் சுற்றிவருகின்றனர், வணிகம் செய்கின்றனர். தங்களின் அரசியல் உரிமைகளுக்காக சாலையில்
இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். இதை இந்திய அரசு அனுமதிக்கிறது.
ஆனால் ஈழத் தமிழர்களுக்கு எந்த ஒரு உரிமையையும் கொடுக்காதது
மட்டுமல்ல இந்திய ஆட்சித் தலைவர்கள் தமிழகம் வரும்போது முகாம்களில் இருந்து யாரும்
அன்றைய தேதியில் முகாமைவிட்டு வெளியில் செல்லக்கூடாது என 110 முகாம்களுக்கும் உத்தரவு போடுகிறார்கள்.
நைசீரியாவைச் சேர்ந்த சிலர் கடந்த ஆண்டு திருப்பூரில்
கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் தமிழக அரசு அதிகாரிகளுக்கும், கியூ பிரிவு காவல்துறைக்கும் கொடுத்த தொல்லையை தாங்க முடியாத
தமிழக அதிகாரிகள் சொந்த செலவில் அவர்களை அவர்களின் தேசத்திற்கு அனுப்பி வைத்து விட்டனர்.
வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டால் அந்தந்த நாட்டைச் சேர்ந்த
தூதரக அதிகாரிகள் சிறைக்கு வந்து அவர்களை சந்தித்து , தேவையான பொருள் மற்றும் சட்ட உதவிகளைச் செய்வார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் நாடற்றவர்களாய் ஆக்கப்பட்டுள்ளதால் அவர்களைப் பார்க்க சிறையிலும்
முகாமிலும் யாரும் வருவதில்லை . அவர்கள் குடுமபங்பளையும் உறவுகளையும்
பிரிந்து நீண்ட ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் , அவர்களில் பலர் மனநோயாளியாக மாறியுள்ளனர்.
தமிழக மக்களே இந்த முகாம்கள் நமது மண்ணின் அவமானச் சின்னங்கள். இந்த முகாம்களை மூட வழி சொல்லுங்கள்.
புதன், 27 ஏப்ரல், 2016
புதன், 30 மார்ச், 2016
“தோழர் லெனினும் தமிழ்த்தேச விடுதலைக் களமும் “ நூல் வெளியீடு மற்றும் வீரவணக்க நிகழ்வு
தோழர் லெனின் தமிழ்நாடு விடுதலைப்படையின்
தளபதியாக இருந்து செயல்பட்டார்.கடந்த 1994 ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்தார். தோழர் லெனின் அவர்களின் 22
ஆம் ஆண்டு நினைவையொட்டி பெண்ணடத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் 29.03.2016 காலை 10
மணிக்கு தமிழ்த்தேச மக்கள் கட்சி தோழர்களால் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தோழர் லெனின் நினைவிடத்தில் கூடியத் தோழர்களை கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலாளர் தோழர் பிரபாகரன் வரவேற்புரையாற்றி வரவேற்க தோழர் செந்தமிழ்க்குமரன் தலைமையேற்றார்.தோழர்கள் பொன்னிவளவன்,மாயவேல்,நாகவரசன் முன்னிலை வகித்தனர்.
கட்சித்தோழர்கள் வெற்றித்தமிழன்,குமார்,வெளிச்சம் மேகநாதன்,..மாந்தநேயப் பேரவை பஞ்சு ,தமிழ்த்தேசியப் பேரியக்கம் முருகன்,புலவர் கலியபெருமாள் தம்பி மாசிலாமணி,கட்சி பொதுச்செயலாளர் தோழர் தமிழ்நேயன்,தலைவர் புகழேந்தி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்ற தோழர் லெனின் தம்பி இசுடாலின் நன்றியுரையாற்றினார்.
நிகழ்வில் தோழர் சுந்தரம்,லெனின் சகோதரர் பகத்சிங் உட்பட நண்பர்கள் உறவினர்கள் பல்வேறு இயக்க ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.
கட்சியின் அமைப்புச் செயலாளர் எழுதியுள்ள “தோழர் லெனினும் தமிழ்த்தேச விடுதலைக் களமும் “ நூல் வெளியிடப்பட்டது.
தோழர் லெனினும் தமிழ்த்தேச விடுதலைக்களமும் நூலை தோழர் லெனினின் சகோதரி வாசுகி அக்கா இல்லத்தில் கட்சித்தலைவர் புகழேந்தி வெளியிட அக்காவும் அவரது கணவர் கதிர்வேலும் பெற்றுக்கொண்டனர்.
தோழரின் நினைவேந்தல் நிகழ்வும் புத்தகவெளியீடும் பல நெருக்கடிகளைக் கடந்து சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து தோழர்களுக்கும் பரப்புரை செய்த தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
தமிழ்த்தேச மக்கள் கட்சி
புதன், 3 பிப்ரவரி, 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)